தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


கர்நாடகம் புதிய அணைகள் கட்டும் இடத்தில் ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று மறியல் போராட்டம்! - தோழர் பெ.மணியரசன் அறிவிப்பு!


கர்நாடகம்  புதிய அணைகள் கட்டும் இடத்தில் 
ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று மறியல் போராட்டம்!
காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு!
 ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிவிப்பு!

காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம்நேற்று (17.11.2014) காலைதஞ்சை செஞ்சிலுவைச் சங்கஅரங்கத்தில் நடைபெற்றதுகூட்டத்திற்குக்காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன்தலைமையேற்றார்.

இக்கூட்டத்தில் .தி.மு.துணைப் பொதுச் செயலாளர் திருதுரைபாலகிருட்டிணன்தமிழர் தேசிய முன்னணிப்பொதுச் செயலாளர் திரு அய்யனாபுரம் சி.முருகேசன்விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் திருகுடந்தைஅரசன்மூன்று மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருவலிவலம் முசேரன்தமிழகவிவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு.மணிமொழியன்காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்புசங்கத் தலைவர் திருகாவிரி தனபாலன்தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் திரு...சின்னத்துரைநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரைமீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் .செயராமன்மனித நேய மக்கள் கட்சி வணிகப் பிரிவுத் தலைவர் திருகலந்தர்புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர் திரு சுகுமார்தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தஞ்சை மாவட்டப்பொருளாளர் திரு வாசுதிருத்துறைப்பூண்டி திரு நெல் செயராமன்திருவாரூர் திரு ஜிவரதராசன்தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழபால்ராசுதலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்பழஇராசேந்திரன்தோழர் நாவைகறைதோழர் விடுதலைச்சுடர்திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன்,திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் தனபாலன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைபாளர் தோழர்பெ.மணியரசன் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.

1. ஆடுதாண்டு காவிரி என்று அழைக்கபடும் மேகேதாட்டுப் பகுதியில் 48 .மி.கொள்ளவு கொண்ட இரு அணைகள்காவிரியின் குறுக்கே கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வரமால் தடுக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளதுஉச்ச நீதிமன்றம்காவிரித் தீர்பாயம் ஆகிய நீதித்துறை தலைமை அமைப்புகளின் ஆணைகளைத்துச்சமாகத் தூக்கியெறிந்து தமிழர்களுக்கு எதிராக இனப் பகையோடு செயல்படும் கர்நாடக அரசின் இன்னொருஅட்டூழியம் தான் புதிய அணைகள் கட்டும் திட்டம்இரு அணைகளும் கட்டப்பட்டு விட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட மேட்டூர் அணைக்கு உபரி வெள்ளமாக வராமல் கர்நாடக அரசால் தடுக்க முடியும்அதன் பிறகு தமிழ்நாட்டில்24,00,000 ஏக்கர் சாகுபடி நிலம் பாலை நிலம் ஆவதுடன்காவிரியால் குடி நீர் பெறும் 20 மாவட்டங்களில் உள்ள பலகோடி மக்கள் குடி நீர் இன்றி பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள்எனவே தேர்ந்தேடுக்கப் பட்ட ஆயிரம் பேரைஒகேநக்கலில் இருந்து பேரணியாக அழைத்துச் சென்று ஆடுதாண்டு காவிரியில் அணைக்கட்டும் இடத்தில் மறியல்போராட்டம் நடத்திமக்கள் விரோதத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது என்று ஒரு மனதாகக் காவிரி உரிமை மீட்புக்குழு முடிவு செய்துள்ளது.

2. ஆடுதாண்டு காவிரியில் இரண்டு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து22.11.2014 அன்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு திருவாரூர்நாகைதஞ்சை மாவட்டங்களில்நடத்தவுள்ள முழு அடைப்புபொது வேலை நிறுத்தம்தொடர்வண்டி மறியல் போராட்டங்களுக்குக் காவிரி உரிமைமீட்புக் குழு முழு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

3. தமிழ் மக்களைத் தாக்க உள்ள பேராபத்தை உணர்ந்து கொண்டு அவசர நடவடிக்கையாக அனைத்துக் கட்சிக்குழுவினரை அழைத்துக் கொண்டு சென்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைப் பார்த்துப் பேசி புதியஅணைகள் கட்டும் திட்டத்திற்கு நடுவண் அரசின் சுற்றுச்சூழல் – வனத்துறையினரும் - நடுவண் அரசின்நீர்ப்பாசனத்துறையினரும்அனுமதியளிக்காமல் தடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விண்ணப்பம் கொடுத்துஅழுத்தம் தரவேண்டும் என்று தமிழக முதல்வர் திரு பன்னீர்ச்செல்வம் அவர்களை காவிரி உரிமை மீட்புக் குழுஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது

இவண்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.

அறிக்கை வெளியீடு
=========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
=========================
பேச: 76670 77075, 9443274002
=========================

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மறுப்பது ஏமாற்றமளிக்கிறது! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மறுப்பது ஏமாற்றமளிக்கிறது!
இதில் ஏட்டிக்குப் போட்டி அரசியல் கூடாது!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை


காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டுமென தமிழக முதல்வர் செயலலிதா அவர்களுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அதன்பிறகு, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், எல்லாக் கட்சிகளிடமும் ஒரே கருத்துதான் இருக்கிறது என்றும், எனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் செயலலிதா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது மிகவும் வேதனையளிக்கிறது, ஏமாற்றமளிக்கிறது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதில், கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒரே கருத்து தான் இருக்கிறது. இருந்தாலும், அவர்கள் ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறார்கள்? அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு, முதலமைச்சர் சித்தராமையா பிரதமரை சந்திக்க உள்ளாரே, அது ஏன்? ஏனெனில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதற்கு மேலும் அழுத்தம் தருவதற்கும், ஒருவேளை வாரியம் அமைத்தால் அதை எதிர்த்து மக்கள் எழுச்சியை உண்டாக்குவதற்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்ட உத்தியை கர்நாடக அரசு கடைபிடிக்கிறது.

தொடர்ந்து காவிரி நீர் மறுக்கப்பட்டு, குறுவையும் சம்பாவும் பாதிக்கப்பட்டு குடி தண்ணீரும் இன்றி கோடிக்கணக்கான தமிழக மக்கள் பல ஆண்டுகளாக அல்லலுற்று வருகின்றனர். தமிழக மக்களின் இந்தத் துயரத்தைப் போக்க உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது இந்திய அரசின் சட்டப்படியான கடமையாகும். அந்த சட்டக்கடமையை இந்திய அரசு நிறைவேற்றிட நீதிமன்றத்தின் வழியாக முயல்வது ஒருவகை. அரசியல் ரீதியாக முயல்வது இன்னொரு வகை. கர்நாடக அரசு இந்த இரு வழிமுறைகளையும் தொடர்ந்து கடைபிடிக்கிறது. இந்த இரு வழிகளுக்கும் மேலாக காவிரி உரிமையை தமிழ்நாட்டிற்கு மறுப்பதற்கு, கர்நாடக விவசாயிகளும் இனவெறி அமைப்புகளும் வீதியில் இறங்கி போராடுவதை கர்நாடக அரசும், அரசியல் கட்சிகளும் பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கின்றன.

ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட இந்திய அரசுக்கு ஒரு நெருக்கடி கொடுக்கக்கூட முதலமைச்சர் செயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த விரும்பவில்லை.

கர்நாடகத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர்களான அனந்த் குமார், சதானந்த கவுடா ஆகிய இருவரும், இந்திய அரசு காவிரி மேலாண்மையை வாரியம் அமைக்காமல் தடுப்போம் என்று ஒளிவு மறைவின்றி அறிவிக்கின்றனர். அச்செய்தி ஊடகங்களில் வந்துள்ளது. அவ்விருவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சேர்த்துதான் இந்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால், கன்னட இனச்சார்போடு நடுவண் அமைச்சர் பொறுப்புக்கு முற்றிலும் முரணான வகையில் சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக சவால் விடுகிறார்கள். இந்த இரு நடுவண் அமைச்சாகளின் சட்டவிரோதப் போக்கை தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திக் கண்டிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மேற்படி இரு நடுவண் அமைச்சர்களும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவ்வாறு குரல் கொடுக்கிறார்கள் என்று கூறுவது அவர்களின் சட்டவிரோதச் செயலை தமிழக முதல்வர் அனுசரித்துப் போவதுபோல் உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, கர்நாடகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பா.ச.க. நடுவண் அரசு மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்குமா என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது.

எனவே, கடந்த காலங்களில் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் ஏட்டிக்குப் போட்டி அரசியல் நடத்தி தமிழக மக்களின் உரிமைகளை பலி கொடுத்தது போது்ம். இனிமேலாவது, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட இக்கழகங்கள், ஆக்க வழியில் செயல்பட வேண்டும். அதற்கு, முன் எடுத்துக்காட்டாக முதலமைச்சர் செயலலிதா அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன் தமிழக மக்களுக்கு விழிப்புணர்ச்சியையும் எழுச்சியையும் நம்பிக்கையையும் உண்டாக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு

தஞ்சையில் மார்ச்சு 1 அன்று பெருந்திரள் மக்கள் பங்கேற்புடன் காவிரி எழுச்சி மாநாடு!

தஞ்சையில் காவிரி எழுச்சி மாநாடு
2014 - மார்ச்சு 1 - காரி(சனி)க்கிழமை

காவிரி இல்லாமல் வாழ்வில்லை  !
களம் காணாமல் காவிரி இல்லை!!

பன்னாட்டுச் சட்டங்களுக்கும் இந்திய நாட்டுச் சட்டங்களுக்கும் முரணாகத் தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை கர்நாடகம் மறுக்கிறதுதமிழ் இனத்தைப் பகை இனமாகக்  கருதும் கன்னட இனவெறி அங்கே கோலோச்சுகிறது

கர்நாடகத்தின் தமிழினப் பகை அரசியலுக்கு இந்திய அரசு துணை போகிறது. தமிழினத்தை வஞ்சிக்கிறதுகாவிரித் தீர்ப்பாயம் மிகக்  குறைந்த அளவாக ஒதுக்கிய 192.மி.. தண்ணீரை கர்நாடகத்திலிருந்து பெற்றுத் தர இந்திய அரசு மறுக்கிறதுகாவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்காக அரசிதழில் ஒப்புக்கு வெளியிட்டுவிட்டு ஒதுங்கிக் கொண் டது இந்திய அரசு. கர்நாடகம் எதிர்க்கிறது என்பதற்காகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது.

தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்க பெரிய கட்சிகள், மக்கள் எழுச்சி உண்டாக்கும் முயற்சியில் ஈடுபடவே இல்லைஅனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டக் கூட அவை தயாராக இல்லை

இந்நிலையில் 28 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு காவிரி நீர் இல்லாமல் சாகுபடி இழந்துள்ளதுஅல்லது சாகுபடி செய்து தண்ணீர் இல்லாமல் கருகி சாவியாகிப் போகிறதுதமிழகத்தின் முக்கால் பாக ஊர்களுக்குக் குடிநீர் வழங்கும் காவிரி நீர்க்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

காவிரி உரிமை மீட்க, களம் அமைக்க வேண்டியது அவசரத் தேவையாக உள்ளதுஉழவர்கள் வலிமையை - தமிழர்கள் ஒற்றுமையை உயர்த்திக் காட்ட காவிரி எழுச்சி மாநாடு ஒரு சிறந்த வாய்ப்பு.  2014 மார்ச் 1ஆம் நாள் காரி(சனி)க்கிழமை முழுநாள் மாநாடு நடைபெறு கிறதுகாவிரி அரங்கு, வேளாண் பொருளியல் அரங்கு, சூழலியல் அரங்கு என கருத்தரங்குகள்நிறைவரங்கு எனப் பொது அரங்கு, எழுச்சி இசை எனப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. வல்லுநர்களும், தலைவர்களும் உரையாற்றுவார்கள்.

எதிர்காலப் போராட்டம் குறித்துத் தீர்மானங்கள் நிறை வேற்றப்படும்தமிழகம் தழுவிய மாநாடாகத் தஞ்சை மாநாடு நடக்க உள்ளதுகலந்து கொள்ள இப்பொழுதே அணியமாகுங்கள்


இங்ஙனம்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர் - காவிரி உரிமை மீட்புக் குழு.



காவிரி வழக்கில் காலம் தாழ்த்திய உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது!

காவிரி வழக்கில் காலம் தாழ்த்திய உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட150க்கும் மேற்பட்டோர் தஞ்சையில் கைது!

 
காவிரி வழக்கில் காலம் தாழ்த்தி தமிழகத்திற்கு ஓர வஞ்சனையாக நடந்து கொண்டு கன்னட வெறியர்களுக்குத் துணை போகும் உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க உத்தரவிடக் கோரியும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று (27.01.2014), தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்று ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்த அனுமதி கிடையாது எனக்கூறி மாவட்டக் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்ட நீதிமன்றச் சாலை அருகில், நீதிமன்றத்திற்கு முன்பு காவல்துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவாகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன் தலைமையேற்றார். தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு. அய்யனாவரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனர் திரு குடந்தை அரசன், பாரம்பரிய நெல் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. செயராமன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் காசிநாதன், கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் சி.ஆறுமுகம், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் காளிதாசன், தமிழக மனித புரட்சிக் கழகத் தலைவர் திரு. அரங்க குணசேகரன், காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திரு. காவிரி தனபாலன், பேரழிவுக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் திரு. கே.கே.ஆர்.லெனின், மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு மயிலாடுதுறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செயராமன், தாளாண்மை உழவர் இயக்கப் பொறுப்பாளர் திரு. கோ.திருநாவுக்கரசு, கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கம் திரு. சிவப்பிரகாசம், மயிலாடுதுறை விவசாயிகள் சங்கம் திரு. திருவரசமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தோழர்களும் என மொத்தமாக 150 பேரை காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர்.



தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் விடுதலைச்சுடர், தோழர் பட்டுக்கோட்டை இராசேந்திரன், தோழர் சி.ஆரோக்கியசாமி, த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் காமராஜ், தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு, த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.




தஞ்சை வடக்கு வீதியிலுள்ள திருமண மண்டபத்தில்  அடைத்து வைக்கப்பட்டு மாலை 6.00 மணியளவில் விடுதலை செய்தனர்.






 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger