தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை!

புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை!


புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.


ஐட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்த வல்லுனர்களின் கருத்துக்கள் அடங்கிய ஆய்வறிக்கையையும் புதுச்சேரி முதல்வரிடம் ஐயா பெ மணியரசன் அவர்கள் நேரில் வழங்கி விளக்கினார்.


காவிரி உரிமை மீட்புக்குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா. வேல்சாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி, நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கத் தலைவர் தோழர் த. இரமேசு, இலக்கியப் போக்கில் இலக்கிய மன்றத் தலைவர் திரு பராங்குசம், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் கௌரி, தமிழர் களம் தலைவர் தோழர் கோ. அழகர், உலகத் தமிழ் கழகம் புதுச்சேரி தலைவர் திரு. கோ. தமிழலகன், நா.த.க. அரியாங்குப்பம் செயலாளர் திரு. செ. இளங்கோவன், உ.த.க. திரு. புதுவை வேலா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உடனிருந்தனர்.




செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger